வாடிகன்: கடந்த புதனன்று கத்தோலிக்க திருத்தந்தையான போப் பிரான்சிஸ் சளி, மூச்சு குழாய் அழற்சி மற்றும் காய்ச்சல் காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் போப் பிரான்சிஸ் வாராந்திர பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆனால் சுவாச பிரச்னை காரணமாக மத பாடத்தை அவரால் கற்பிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தனது உதவியாளரை படிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.