Saturday, May 11, 2024
Home » பொன்னமராவதி வழியாக மதுரை ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை: வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி வழியாக மதுரை ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை: வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

by MuthuKumar

பொன்னமராவதி: பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் சேவை துவங்கப்படுமா என்று அப்பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னமராவதியில் வர்த்தகர்கள், மற்றும் பொதுமக்கள் ரயில் சேவைக்கு மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று தான் ரயில் பிடிக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ரயிலை சுற்றுலா சென்று தான் பார்க்க வேண்டிய நிலையுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. வர்த்தகர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் ரயில் சேவை இல்லாததால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு நீண்ட தூரம் சென்று ரயில் பயணம் செய்யவேண்டியுள்ளது. மேலும் சரக்கு ரயில் இருந்து எந்த பொருளும் நேரடியாக கொள்முதல் செய்து இங்கு கொண்டுவந்துவிடலாம். அது இல்லாமல் இருப்பதால் அதிக கட்டணம் கொடுத்து லாரி சர்வீசில் போட வேண்டியுள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றார். இதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கும், திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi