சென்னை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிர்மலா சீதாராமன் ஒரு நிகழ்ச்சியில் மதத்தின் பெயரால் ஓட்டு சேகரித்ததாக புகார். மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக்கூடாது என விதிகள் உள்ள நிலையில் மதத்தின் பெயரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.