சென்னை: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்கனவே சட்டத்துறை செயலாளராக இருந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் சட்டத்துறை செயலாளராக இருந்ததை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார். சட்டத்துறை செயலாளராக இருந்தபோது பொன்முடி வழக்கில் சொத்துகளை முடக்க ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். சொத்துகள் முடக்க உத்தரவிட்டதை என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டியபோது நினைவில்லை என நீதிபதி ஜெயச்சந்திரன் பதில் அளித்தார்.