தஞ்சை: அரசியலுக்கு புதியவர் என்று அண்ணாமலை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார் அண்ணாமலை. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முதலில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.