சென்னை: சென்னையில் உரிமம் பெற்ற 2,125 துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி உள்ளதால் துப்பாக்கிகளை உடனே காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தவறினால் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் துப்பாக்கிகளை ஒப்படைக்க நிர்பந்திக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.