மதுரை: அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் முருகேசன், போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு எதற்கு?. தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்தே பாதுகாத்துக் கொள்ளலாமே!. மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியமில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.