தென்காசி: போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்ய ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர் முருகன் உடலை இன்று மாலை 4 மணிக்குள் வாங்கி இறுதி சடங்கு செய்ய அறிவுறுத்தப்பட்டது. முருகனின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். ஓட்டுநர் முருகன் மனைவி மீனா உள்ளிட்ட 3 சாட்சிகளிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் விசாரணை நடத்தினார். தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் முருகன் உயிரிழந்தது குறித்த வழக்கில் இறுதி உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.