சென்னை: போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனைவிட பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனே முக்கியம் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. முன்னாள் பெண் டிஜிபியின் பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது முன்னாள் மருமகளின் சகோதரர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் ஆனந்த் மனு அளித்துள்ளார். திரை மறைவில் ஒளிந்துகொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என கூறி விஜய் ஆனந்த் ஜாமின் மனு தள்ளுபடி செய்துள்ளார் .