மதுரை: பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார். கஜினி போல் தமிழ்நாட்டுக்கு பிரதமர் எத்தனை முறை படையெடுத்தாலும் மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.