புதுடெல்லி: வாட்ஸ்அப்பில் சமீபத்தில் பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்வழியாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருவதாக புகார் எழுந்தது. இப்போது பிங்க் நிற வாட்ஸ்அப் மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர். அதன்விவரம் வருமாறு: செல்போனில் ‘‘வாட்ஸ்அப் பிங்க்” என்ற பெயரில் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இது தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் ஆகும்.
அதை கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உடனடியாக பரவி வாட்ஸ்அப் குழுவில் பதிவிடும் நபர் எந்த குழுவில் இருந்தாலும் அந்த குழுவில் உள்ள நபருக்கு பிங்க் வாட்ஸ்அப் அப்டேட் என்று தானாகவே பதிவாகி விடும். இந்த லிங்கை யாராவது தொட்டால் வாட்ஸ்அப் முழுவதும் ஹேக் செய்து வங்கி கணக்குகள் முதல் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படும். மேலும் அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. இதுகுறித்து மும்பை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.