மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம், கப்பலூர் சிட்கோ பகுதியில் 2,000க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு தகராறு செய்வதாக புகார் எழுந்துள்ளது. சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.