திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள சோழபுரம் அத்தியூர் மெயின் சாலையில் வசிப்பவர் சங்கர் (50). பாமக உறுப்பினரான இவர், தனது வீட்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி கொண்டு, காரை வீட்டின் முன் செட்டில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை வெளியில் வந்து பார்த்தபோது கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சோழபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.