சென்னை: பிஎச்.டி. படிப்புக்கும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தவுள்ள ஒன்றிய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என்று கி.வீரமணி கூறியுள்ளார். நீட், க்யூட் தேர்வை தொடர்ந்து மாநில பல்கலைக்கழக உரிமையிலும் ஒன்றிய அரசு தலையிட்டுள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே ஒன்றிய அரசின் உரிமை மீறல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.