சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை அகற்றக் கோரி கையெழுத்து இயக்கத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவி அவர்களை அகற்றக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் நாளை முதல் 20.07.2023 வரை பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை 20.06.2023 காலை 11 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் முதல் கையெழுத்திடுகிறார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்கிறார்.