சென்னை: ஆருத்ரா நிறுவன இயக்குநர் தீபக் பிரசாத்தை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 5 நாள் காவல் முடிந்த நிலையில் மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸ் மனு தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ரூ.2,500 கோடி மோசடி செய்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.