சென்னை: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்காக இலங்கை தூதரகம் சென்றுவர முருகனுக்கு அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் இலங்கை குடிமகன் என்பதால் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிக்க வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார். தனது கணவர் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு சென்றுவர அனுமதி தர வேண்டும் என நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை தாங்கள் விசாரிக்க முடியாது என நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு அறிவித்துள்ளது. வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.