திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே பெருமாள் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறி 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.