Friday, May 17, 2024
Home » திருவொற்றியூரில் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கியவர் உடல்மீட்பு

திருவொற்றியூரில் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கியவர் உடல்மீட்பு

by Francis

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மழை வெள்ளத்தில் மூழ்கி மாயமானவரின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. திருவொற்றியூர் பேசின் ரோடு இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (43), கிரேன் ஆபரேட்டர். கடந்த 6ம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் மாத்தூரில் வசிக்கும் தனது தாயை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து, திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி திருவொற்றியூர்- மணலி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் செல்வராஜ் இறந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து செல்வராஜின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த 6 ம் தேதி கனமழையின் காரணமாக திருவொற்றியூர்-மணலி சாலையில் இடுப்பளவிற்கு மழைநீர் வெள்ளம் ஓடியது. மழைநீரில் நடந்து செல்லும் போது செல்வராஜ் சிக்கி மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

nineteen + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi