Saturday, May 11, 2024
Home » இலங்கை கடற்படையினரின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல் தொடரும்

இலங்கை கடற்படையினரின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல் தொடரும்

by Ranjith

இலங்கை கடற்படையினரின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசை அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் இலங்கை கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் விடாமுயற்சியினால், இதுவரை 242 மீனவர்களும், 1 மீன்பிடி படகும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினர்.

இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 88 மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். தூதரக அளவிலான வழிமுறைகளைப் பின்பற்றி மீதமுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

15 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi