ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் மீது பல்வேறு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இருவரையும் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், பல்கலைக்கழகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்று, துணை வெந்தர், பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.