சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தை அணிந்துவரக் கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தர உள்ளார். விழாவுக்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என சேலம் போலீஸ் அறிவுறுத்தி உள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக்கூடாது என்றும் போலீஸ் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.