சென்னை: சென்னை பெரவள்ளூரில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் போலீசிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார். வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜிடம் தகராறில் ஈடுபட்ட
பாஜக ஆதரவாளர் ரவிச்சந்திரன் கைதாகினார். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.