Saturday, May 18, 2024
Home » பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு

பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு

by MuthuKumar

பெரம்பூர்: பெரம்பூரில் மாநகர பஸ் மோதியதில் ஐடிஐ மாணவன் பரிதாபமாக இறந்தார். பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை 2வது தெருவை சேர்ந்தவர் அப்புன் ராஜ். இவரது மகன் வேம்பு விஷ்வா (18), பெரம்பூரில் உள்ள ஐடிஐயில் 2ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பரின் பைக்கை வாங்கி கொண்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே, விநாயகபுரம் பகுதியில் இருந்து காயிதே மில்லத் கல்லூரி வரை செல்லும் தடம் எண் 29 என்ற மாநகர பஸ் வந்தது. இரண்டும் நேருக்கு நேர் மோதியது. இதில், வேம்பு விஷ்வா தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். பைக் நொறுங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேம்பு விஷ்வாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேம்பு விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

19 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi