Friday, May 17, 2024
Home » பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தீவிர வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தீவிர வாக்கு சேகரிப்பு

by Arun Kumar

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாடக்குடி கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், ஆயிரத்து 200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பள்ளி விடை – பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

இதனைத்தொடந்து, V. துறையூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாரிவேநத்ர், தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் MP நிதியை தொகுதி மக்களுக்கு, தாம் முழுமையாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் ரெத்தினங்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மருதூர் கிராமத்திற்கு சென்ற பாரிவேந்தர், காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, மேல பெருங்காவூர் கிராமத்திலும், கீழப்பெருங்காவூர் கிராமத்திலும் டாக்டர் பாரிவேந்தர், பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நகர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் ஜெயிக்கிறார் ஜெயிக்கிறார்” பாரிவேந்தர் ஜெயிக்கிறார்” என்று முழக்கமிட்டு வாக்கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து நகர் கிராமத்தில் பொதுமக்களிடையே பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019 தேர்தல் வாக்குறுதியின்படி, 118 கோடி ரூபாய் செலவில், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகவும், அந்தத் திட்டம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த பாரிவேந்தர், இப்பகுதி மக்களின் கோரிக்கையான தடுப்பணை மற்றும் மயானப் பாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, நெய்க்குப்பை ஊரில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், நாடு உயர, வளர தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் MP-ஆக செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டதாகவும், மக்களுக்கு உதவி செய்யவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தேடி தேடி உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் எனக் கூறிய பாரிவேந்தர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி,118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

ஜனநாயகம் காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்றும், அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆன்மீகத்திற்கு விவேகானந்தர். அரசியலுக்கு மோடி என புகழராம் சூட்டிய பாரிவேந்தர், உலக நாடுகள் மோடியை பார்த்து Boss என்று அழைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்

You may also like

Leave a Comment

7 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi