சென்னை: தனது மக்கள் நல இயக்கத்தின் மூலம் மக்கள் பணி தொடரும் என நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால் அரசியல் கட்சியை இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வரும் காலகட்டத்தில் மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.