திருத்தணி: திருத்தணியில் பட்டா கத்தியுடன் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி காந்தி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை 2 பேர் அச்சுறுத்துவதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்திய 2 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரித்ததில் அவர்கள் திருத்தணி முருகப்பா நகரைச் சேர்ந்த நிர்மல்(23) மற்றும் திருத்தணி அக்கையா நாயுடு தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் அலி(19) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.