சென்னை: ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னை மாநகர காவல் எல்லையில் நடந்த கஞ்சாவுக்கு எதிரான அதிரடி வேட்டையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 23 வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா வியாபாரிகள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40.23 கிலோ கஞ்சா, 52 கிராம் மெத்தம் பெட்டமைன், ரூ.30,240 ரொக்கம், 1,961 போதை மாத்திரைகள், 13 செல்போன்கள், 6 பைக், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.