டெல்லி: Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இனி புதிய வாடிக்கையாளர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்றும் டெபாசிட் மற்றும் டாப்-அப் பணம் பெறுவதோ? கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, ஃபாஸ்ட்டேக், என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது என Paytm-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.