புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பவன்குமார் பன்சால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரித்து உள்ளது. பவன்குமார் பன்சாலிடம் கடைசியாக 2022 ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்த நிலையில் நேற்று பவன்குமார் பன்சால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.