மதுரை: இனிவரும் காலங்களில் தண்டனை கைதிகள் பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக்கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தமிழக தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி சாதாரண விடுப்பு, அவசர விடுப்பு என்பதே பயனில் உள்ளன. பிற மாநிலங்களில் உள்ள பரோல் விதிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்தது.