சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா எஸ்.பாண்டியன், நிறைகுளத்தான், சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.