பாட்னா: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிப்போம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். தற்போது தலைவர்கள் பலரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். தேர்தல் முடிந்ததும், கூட்டத்துக்கான இடத்தை முடிவு செய்வோம். பாட்னாவில் நடந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.