சென்னை: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி; தவறு செய்தவர்கள் மீது தாமதமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.