டெல்லி : நாடாளுமன்ற மக்களவைக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து மர்ம பொருள் வீசியது தொடர்பாக பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “நாடாளுமன்ற அவை மையப் பகுதிக்குள், முதல் நபர் இறங்கியதும் அவர் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்தோம் ஆனால் 2வது நபர் கீழே இறங்க ஆரம்பித்ததும் அனைவரும் சுதாரித்துவிட்டோம்;அந்த நபர் தனது காலணிக்குள் இருந்து மர்மமான ஒரு பொருளை வெளியே எடுத்தார், அதற்குள் இருந்து புகை வெளியேறியது,”இவ்வாறு தெரிவித்தார்.