புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியின் பைனலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பாருல் சவுதாரி 9 நிமிடம், 15.31 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார். பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பாருல் சவுதாரி தகுதி பெற்றதுடன், 2016 ரியோ ஒலிம்பிக்சில் லலிதா பாபர் படைத்த தேசிய சாதனையையும் (9:19.76 விநாடி) முறியடித்து அசத்தினார்.