சென்னை: பரங்கிமலை பகுதியில் குடிபோதையில் காவலரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். காவலர் வீரசெல்வத்தை தாக்கிய ரோகித், விக்னேஷ், முகமது ஆசிப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.