தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2020-ல் பெண்ணாகரத்தில் பிடிஓவாக பணியாற்றிய கிருஷ்ணன், ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. முறைகேடு செய்திருப்பது. தெரியவந்ததை அடுத்து சோதனை நடத்துவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.