சென்னை :பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுதாங்கலில் செங்கொடி ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்க மாநாட்டில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,பஞ்சு மிட்டாய்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்த்தது உறுதியானால் விற்பனை தடைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பஞ்சு மிட்டாய் விற்பனையை கண்காணிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.