திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக பிரமுகரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவருமான சுமன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் சுமன் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.