Wednesday, May 15, 2024
Home » பள்ளிப்பட்டில் அரசு பள்ளிக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேசை, நாற்காலிகள்: தனியார் நிறுவனம் வழங்கியது

பள்ளிப்பட்டில் அரசு பள்ளிக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேசை, நாற்காலிகள்: தனியார் நிறுவனம் வழங்கியது

by Dhanush Kumar

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், தேர்வு காலங்களில் போதுமான அளவிற்கு மேசைகள் மற்றும் நாற்காலிகள் இல்லாத நிலையில் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தலைமை ஆசிரியர் கோரிக்கையை ஏற்று மோபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில், ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் 100 இருக்கைகள் மற்றும் மேசைகளை பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செயிடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மோபிஸ் இந்தியா நிறுவன நிர்வாகிகள் நரசிம்மன், பிரசன்ன குமார் ஆகியோர் கலந்து கொண்டு மேசைகள் மற்றும் இருக்கைகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். மாணவர் வசதிக்காக 100 மேசைகள் மற்றும் இருக்கைகள் வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

two + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi