சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடையாகும் எனவும் மழை நிறைந்த காலத்தில் அதிக நீரை தேக்கி வைத்து, கோடை காலத்தில் சீராக வெளியிடும் திறன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உள்ளது எனவும் அன்புமணி கூறியுள்ளார். மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிவில் இருந்து காக்கும் பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.