திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனி மலை கோயிலுக்கு எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. மலை அடிவாரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் பக்தர்கள் செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.