மதுரை: பழனியில் நவராத்திரி விழாவில் யாருக்கும் சிறப்பு முதல் மரியாதை வழங்கப்பட மாட்டாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி புலிப்பாணி பாத்திர சுவாமிக்கு சிறப்பு மரியாதை வழங்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளையில் பதில் அளித்துள்ளது. கட்டளைதாரர்களுக்கு என்ன மரியாதை வழங்கப்படுமோ அந்த மரியாதை மனுதாரருக்கு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.