லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 14ம்தேதி அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 8வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இதனிடையே இந்த போட்டியில் இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்தால் அந்நாட்டிற்கு சென்று வீரர்களுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி தெரிவித்துள்ளார்.
அதாவது தங்களுக்கு தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு வங்கதேசம் அவமான தோல்வியை பரிசளித்தால் டாக்காவுக்கு சென்று வீரர்களுடன் மீன்விருந்து சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.