Wednesday, May 29, 2024
Home » பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

by MuthuKumar

இஸ்லாமாபாத்: அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் கடந்த ஆண்டு பதவியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக நடந்த அரசியல் பேரணியின் போது அசைத்த இரகசிய அரசு ஆவணம் காணாமல் போனது தொடர்பான வழக்கு தொடர்பட்டது.

இந்த ஊழல் வழக்கில் இம்ரான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அட்டாக் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்து விசாரணை நடைபெற்றது. ஊழல் வழக்கில் 70 வயதான அரசியல்வாதிகளுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று இடைநிறுத்தப்பட்டது. இருப்பினும், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அபுவல் ஹஸ்னத் சுல்கர்னைன், அவரை சிறையில் அடைத்து இன்று விசாரணைக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi