Wednesday, May 22, 2024
Home » பக்கா டேஸ்ட் பலாப்பழ பாயாசம்!

பக்கா டேஸ்ட் பலாப்பழ பாயாசம்!

by Lavanya

கோடைக்காலம் என்றவுடன் எது ஞாபகத்திற்கு வருமோ இல்லையோ, கோடைக்கனியான பலாப்பழம் ஞாபகத்திற்கு வந்துவிடும். கோடையின் தொடக்கத்திலேயே கிடைக்கும் பலாப்பழத்தின் வாசம் அனைத்தையும் மறக்கச் செய்துவிடும். அனைவரும் விரும்பி உண்ணும் இந்த பலாப்பழத்தின் சுவைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்புமே அடிமைதான். இந்த தித்திப்பான பழத்தில் பல ஊட்டச்சத்துக்களும், ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளும் நிறைந்திருக்கின்றன. மூளை மற்றும் உடலுக்கும் அதிக பலத்தைத் தரும் இந்த சுவை மிகுந்த பழம் நரம்புகளை உறுதியாக்கி ரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது. இவற்றில் நிறைந்திருக்கும் ‘விட்டமின் ஏ’ நமது கண்பார்வைக்கு உதவுகிறது. மேலும் அடிக்கடி நோய் தாக்கி அவதியடைபவர்கள், பலாப்பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறுவார்கள். இத்தகைய சிறப்புகள் மிகுந்த பலாப்பழத்தில் இருந்து சுவையான பாயாசம் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை – 500 கிராம்
வெல்லம் – 250 கிராம்
தேங்காய் பால் – 1 கப்
நெய் – 4 டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு
உலர் திராட்சை
ஏலக்காய் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

பலாச்சுளைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சிக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரம் எடுத்து, அதில் 3 டீஸ்பூன் நெய் விட்டு, நன்றாக அரைத்து வைத்துள்ள பலாச்சுளையை சேர்க்கவும். மிதமான சூட்டில் நெய், பலாச்சுளைக்கூழை கிளறி விடவும். இதை தொடர்ந்து, முன்னர் காய்ச்சி வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு தேங்காய்ப்பால் சேர்த்தும் மிக்ஸ் செய்யவும். அதன் பின்னர் அரைத்த ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது தனியாக ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறிக் கொள்ளவும். இவற்றை நாம் தயார் செய்துவரும் பலாப்பழப் பாயாசத்தில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். மிதமான சூட்டை பின்பற்றி சிறிது நேரத்தில் இறக்கினால் பலாப்பழப் பாயாசம் ரெடி.

பகலில் கடுமையாக உழைப்பார்கள். இரவில் எந்த உணவை சாப்பிட்டாலும் நன்றாக தூங்கி விடுவார்கள். இந்த வழக்கம்தான் நம் முன்னோர்களிடம் இருந்தது. இப்போது எந்த வேலை செய்தாலும், என்ன சாப்பிட்டாலும் இரவில் தூக்கம் என்பது பலருக்கு முறையாக வாய்ப்பதில்லை. புரண்டு புரண்டு படுப்பார்கள். ஆனால் தூக்கம் கண்ணாமூச்சி காட்டும். தூக்கம் இல்லாததால் மன நிம்மதி போவதுடன், பல்வேறு நோய்களும் வந்து நம்மை அலைக்கழித்து விடுகின்றன. என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்பவரா? இதை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க!

சூடான பாலில் இருக்கு தூக்கத்துக்கான சூட்சுமம்

இரவில் படுக்கைக்கு போகும் முன் ஒரு கப் சூடான பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. பாலில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின்-டி மற்றும் மெலடோனினும் உள்ளது. இவை நமக்கு நல்ல தூக்கத்தைத் தரும். மேலும் பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இது செரோடோனினாக மாறும். இந்த செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலைத் தர வல்லது. இது நாம் நிம்மதியாக தூங்க உகந்த சூழலை வழங்குகிறது. நாம் அருந்தும் பாலில் ஜாதிக்காய், ஏலக்காய் ஆகியவற்றை ஒரு சிட்டிகையும், பாதாம் பருப்புகளையும் சேர்த்து அருந்தினால், பாலின் சுவை மேலும் அதிகரிக்கும். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

பாதாமில் இருக்கு பல நன்மை

பாதாமில் உள்ள ட்ரிப்டோபன் மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி மனதை லேசாக்கி தூக்கம் வர வைக்கிறது. இது மூளையின் சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் பாதாமில் உள்ள மெக்னீசியம் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. தினமும் இரவில் தூங்கப்போகும் முன் ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துக் கொண்டால் தூக்கம் கேரண்டி.

உறக்கம் தரும் முந்திரி

பாதாமைப் போல தூங்கும் முன் முந்திரிப்பருப்பையும் சாப்பிடலாம். முந்திரிப்பருப்பு நரம்புகளைத் தளர்த்தி உடல் தூக்கத்தை நாட தூண்டுகிறது. முந்திரியில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் சொல்வார்கள். அதை பொருட்படுத்த தேவையில்லை. சர்க்கரை நோயாளிகளும் உணவில் முந்திரியையும் சேர்த்து சாப்பிடலாம். முந்திரியைப்போல ஜாதிக்காயையும் இரவில் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். இதுவும் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இது செரோடோனின் வெளியிடவும் உதவி புரிகிறது.

You may also like

Leave a Comment

6 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi