ஆவடி: ஆவடி சரஸ்வதி நகர், சூரியகாந்தி தெருவைச் சேர்ந்த மஞ்சுநாதன்(40). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்திகா(32) என்பவருடன் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு மாதத்திற்கு முன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மனைவி திருப்பத்தூரில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மஞ்சுநாதன் தங்கியிருந்த வீடு திறக்காததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் நேற்று ஆவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மஞ்சுநாதன் சமையலறையில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
previous post