டெல்லி: பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். பாலியல் புகாரில் மல்யுத்த சங்க முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் பஜ்ரங் புனியா விருதை ஒப்படைக்கிறார். பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மல்யுத்த போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக சாஷி மலிக் அறிவித்திருந்தார்.
பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு..!!
previous post