நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகம் சுற்றியுள்ள வேம்பையாபுரம் மற்றும் அனவன்குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் வேம்பையாபுரம் மற்றும் அனவன் குடியிருப்பு பகுதிகளில் 3 கூண்டுகள் வைத்தனர்.
கடந்த 18ம்தேதி வேம்பையாபுரத்தில் வைக்கப்பட்ட கூண்டில் ஒரு சிறுத்தையும், மாஞ்சோலை முத்தலாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் அனவன்குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் நேற்று முன்தினம் இன்னொரு சிறுத்தையும் சிக்கியது. இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் வேம்பையாபுரத்தில் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியுள்ளது.